Monday, December 8, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (16)

அத்தியாயம் 16

என் முதலாளி வீட்டிற்கான பயணம் குறுகிய காலத்தில் முடிவதைப் போல் இருந்தது. வழி நெடுகப் பல யோசனைகளிலேயே மிதந்து கிடந்தேன்.

"என்னை மன்னிச்சிடு பாரி என்னால உன் 'ப்ரோக்கிரம்' வீணாப் போச்சி".


சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாய் அமைந்துவிடுகிறது. நினைத்தது அனைத்தும் நினைத்தபடி நடக்காமலும் போகிறது.

"நம்மள பத்தி யார்கிட்டயும் எதும் சொல்ல வேணா. உன்ன பத்தி நான் எதுவும் சொன்னதில்லை".

நந்தினியின் முகத்தில் லேசான சோகம் படர்ந்தது. அது அதிக நேரம் நீடிக்காமல் ஒரு இளம் புன்னகையை மெல்லியதாய் உதிர்த்தாள். எனக்கு அர்த்தம் புரியாத புன்னகை. அதை பற்றி நான் கண்டு கொள்ளவில்லை.


முதலாளியின் வீட்டில் விளக்குகளின் அலங்காரம் கோலாகலமாக இருந்தது. எனது வண்டி அவர் வீட்டை நெருக்கிய போது காவலர்கள் கை உயத்தி வரவேற்றார்கள். வீட்டில் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள். ஆட்களும் அதிகம் தான்.

"பாரி'' முதலாளி என்னைக் கை கொடுத்து வரவேற்றார். "நீ தான் ரொம்ப 'லேட்' " என்றார்.

"மன்னிக்கனும்..." என பேச வாயெடுத்த என்னை அவர் பேச்சில் வெட்டினார்.

"சரி.. சரி.. போய் சாப்பிடு" என்றபடி நந்தினியைப் பார்த்தார். அந்தப் பார்வையில் இவள் யார் எனும் கேள்வியும் சேர்ந்திருந்தது.

"என்னுடைய சொந்தகாரவங்க... நந்தினி".

"சொந்தமா?"

"ஆமா... இப்ப தான் படிப்ப முடிச்சி இருக்காங்க... கோ.எல்ல வேலை தேடிகிட்டு இருக்காங்க".

அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் முரளி அவ்விடம் வந்தான். தன்னை அறிமுகப்படுத்தி நந்தினிக்கு கை கொடுத்தான். அவள் என்னைப் பார்த்தபடி தயக்கம் கொண்டே கை குழுக்கினாள்.

"நந்தினி வந்து சாப்பிடுங்க.." முதலாளி சொன்னார். முரளி என்னை அனுகவும் சாப்பாடு வைத்திருந்த இடத்தை நோக்கி அவள் சென்றாள்.

"உனக்கு சொந்தகார பொண்ணு இருக்கிறத பத்தி என்னிட்ட சொல்லவே இல்லை", என்றான்.

"எல்லாத்தையும் அவசியம் சொல்லனுமா?"

"அதுக்கு இல்லைடா... பொண்ணு அழகா இருக்கா..." என்றபடி அவன் பார்வை நந்தினியை திருடிச் சென்றது.

"அதனால..?"

" 'பாய் ஃப்ரெண்ட்' இருகானா?''

கடுப்பில் தலையசைத்தேன். என்ன நினைத்தான் என தெரியவில்லை. நான் அவ்விடம் விட்டு அகன்றேன்.

என் பார்வை அவ்வப்போது நந்தினி மீதே இருந்தது. அவள் கொஞ்சம் உணவு எடுத்துக் கொண்டு அந்த பக்கம் இருந்த பெண்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். என் மனதிற்குள் ஏதோ ஒரு பயம் வாட்டிக் கொண்டிருந்தது.

"ஹெய் பாரி... யாரு அது உன் கூட வந்தது?" என்னுடன் வேலை பார்க்கும் சந்தோஷ். கைகுழுக்கியபடி கேட்டார்.

"ம்ம்... அழகா இருக்காங்க... நீதான் கல்யாணம் பண்ணிக்க போரியா?"

"ஹா ஹா ஹா... அப்ப என் நளினாவ என்ன பண்றது?"

"நளினாவவிட இந்த பொண்ணு பொருத்தமா இருக்கும் உனக்கு", என்றபடி சிரித்தார்.

"நளினா எங்க?"

"ஊருக்கு போயிருக்கா... வர நாளாகும்.."

" நீ கூட போகலையா?"

"அந்த அளவுக்கு அவ குடும்பத்தோட அறிமுகமாகல"

"உன் 'வைப்' எங்க?"

"வீட்டில் இருக்கா... 4 மாசமாகுது..."

" ஓ,,, வாழ்த்துக்கள்... அப்பாவாக போரிங்களா? எப்ப எங்களுக்கு விருந்து?"

அவருடன் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நந்தினி சாப்பிட்டுவிட்டு ஒரு இடமாக அமர்ந்திருந்தாள். முரளி அவளருகே சென்றான். நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். அவன் வருகை அவளுக்கு அசௌகரியமாக இருந்திருக்க வேண்டும். அதுவும் கொஞ்ச நேரம் தான். பிறகு அவனது சகஜமான பேச்சுக்கு சிரித்துக் கொண்டிருந்தாள்.


"ரொம்ப சுவாரசியமா ஏதோ பேசுறிங்க போல?" அவ்விடம் சென்ற எனது பேச்சில் கொஞ்சம் திமிரும் கலந்திருந்ததாகவே அறிகிறேன்.

"என்னடா நீ புதுசா வந்திருக்காங்க... தனியா விட்டுட்டு நீ பாட்டுக்கு இருக்கியே..."

"நீ 'பார்ட்டில' 'ஜாய்ன்' பண்ணிக்கலையாடா???", நான் நந்தினியின் பக்கத்தில் அமர்ந்தேன்.

"அதான் அவுங்க எல்லோரையும் தினம் தினம் 'ஆப்பீஸ்ல' பாக்குறோமே... பிறகு என்ன?"


அவன் மேலும் தொடர்ந்தான். " டேய் பாரி... இவுங்க படிச்சி முடிச்சிட்டு வேலை தேடுறதா சொன்னியே..".

"ம்ம்ம்..." நந்தினி ஆமாம் என தலையசைத்தாள்.

"அப்படினா நம்ம 'ஆப்பீஸ்'ல மூயற்சி செஞ்சி பார்க்கலாமே... நமக்கு தான் வேலைக்கு ஆள் தேவை படுதே..".

"ஆமாவா.." வேண்டா வெறுப்பாக பதில் சொன்னேன்.

" ஆமாண்டா... "அக்கவுன்ஸ் டிப்பார்ட்மெண்டில்' 'கிளார்க்கு' வேலைக்கு ஆள் தேடிகிட்டு தானே இருக்காங்க.."

"ஓ... இப்ப உள்ள 'கிளர்க்' என்ன ஆச்சு?"

"அவுங்க வெளியூருக்கு மாறி போறாங்களாம்.."

"பரவாலை மச்சி... நந்தினிக்கு 'அக்கவுண்ஸ்' பார்க்க வராது".

"அது ஒன்னும் பிரச்சனை இல்லை. கத்துக்கிலாம்... நான் பிறகு முதலாளிகிட்ட சொல்லி வைக்கிரேன்... கண்டிப்பா கிடைச்சிடும்". அவனாகவே திறமை மிக்க முடிவுகளைக் காட்டிக் கொண்டான்.

"ஆமா... இப்ப நந்தினிக்கு என்ன வயசாகுது..?" மேலும் தொடர்ந்தான்.

" எதுக்கு... நீ இங்கயே 'இண்டர்வியூ' பண்ண போரியா?"

"இல்லைடா... ஒரு அறிமுகத்துக்கு தான் கேட்டேன்... கொஞ்ச நாளாவே வெறுபாதான் நடந்துக்கிற... ஏன்னு எனக்கு தெரியும்..."

"ஏன்...?''

"அது சரி... நேத்து நளினாவ 'பஸ்' ஏற்றிவிட்டுட்டு எத்தன மனிக்கு வந்த... எப்ப மறுபடியும் ஊருக்கு வரா?"


'அட பாவி. என் தலையில கல்ல தூக்கி போட்டியே' என நினைத்துக் கொண்டேன். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அக்கனம் நந்தினியைப் பார்த்தேன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. முதலில் கண்ட சிரிப்பும் கூட மரைந்து போய் இருந்தது. இப்போது அவன் பேசியதை கேட்க விரும்பாதவள் போல் பார்வைவை வேரு பக்கம் வைத்திருந்தாள். நான் ஒன்றும் பேசாதிருந்தேன். என் முக மாற்றத்தை அறிந்தவனாக மேலும் கேட்டான்.

"நாளைக்கு நந்தினிய 'இண்டர்வியூக்கு' கூட்டிட்டு வரதானே?"

"அவளுக்கு இந்த வேலை பிடிச்சிருக்கிறதா ஒன்னும் சொல்லலையே", நந்தினி என்னுடைய இச்சொல்லை ஆமோதிப்ப்பாள் என்றே நினைத்தேன். அதிலும் மண் விழுந்தது.

"பரவாலை நான் 'ட்ரை' பண்ணி பார்குறேன்", நான் அதிர்ச்சியான பார்வையோடு அவளைப் பார்த்தேன். அவள் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

"நானும் வேலைக்கு பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும்னு எதிர் பார்க்கலை.. இது 'இண்டர்வியூ' மட்டும் தானே... கண்டிப்பாக கிடைக்கும்னு இல்லை... முயற்சி பண்ணி பார்க்கிறேன்" என்றாள்.

எனக்கு தலை சுத்தி போனது. "நீங்க கவலைப் படாதிங்க... அதான் பாரி இருக்கானே... கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும்... ஓரே இடத்தில் வேலை செஞ்சா உங்களுக்கு சுலபம்... 'டிரன்ஸ்போட்' பிரச்சனை இருக்காது... நளினா ஊருக்கு போய்ட்டு வந்ததுக்கு அப்புரம் கொஞ்சம் கஷ்டம் தான்... இருந்தாலும் பிரச்சனை இல்லை... நான் இருக்கேன்..." என்று சொல்லி சிரித்தான்.

அவனது பேச்சு என் இரத்தத்திற்கு தீ மூட்டி கபாலத்திற்கு சூடேற்றியது. கைகள் முடிச்சிட்டு அவன் முகத்தில் குத்த வேண்டும் போல் இருந்தது. நாசமாய்ப் போனவன் என் வாழ்க்கையில் மண் அள்ளி போடுறானே.

தொடரும்...

12 Comments:

Anonymous said...

வாவ்..இனிமேல்தான் கதையில் சூடுப்பிடிக்கப் போகிறது... எப்படியோ பாரிக்கு கஷ்ட காலம் ஆரம்பிச்சிடுச்சு :-P

VG said...

ippo aapu murali moolam vantirukku pole.. ehehehhehehe

Unknown said...

பாரி....?????????

வால்பையன் said...

அலுவலகம் தொடர்பான நிகழ்ச்சிக்கு மனைவியை அழைத்து செல்லும் போது இம்மாதிரி மறைக்க முடியுமா?

கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது.
கூடவே நீங்கள் ஸாரி பாரி இன்னும் நளீனாவை காதலித்து கொண்டிருப்பது

வெங்கட்ராமன் said...

கதை வேகமெடுக்கிறது.

சூழ்நிலைகளை குற்றம் சொல்ல முடியாது, அதை உருவாக்கிக் கொண்ட பாரி மேல் தான் தப்பு.

பாரி ஹீரோன்னு நினைச்சா, வில்லனா ஆயிடுவாரு போலிருக்கே. . . ?

நட்புடன் ஜமால் said...

\\"ஆமாவா.."\\

அப்படியா என்று அர்த்தம்.

A N A N T H E N said...

//முரளி அவ்விடம் வந்தான். தன்னை அறிமுகப்படுத்தி நந்தினிக்கு கை கொடுத்தான்.//
ஹாஹா... வந்துட்டான்யா வில்லன்... (ஹ்ம்ம்... பாரிக்கு மட்டும் வில்லனாக்கும்...) இப்பத்தானே விளங்குது, முரளியப் பத்தி போன அத்தியாயத்துல எதுக்கு சொல்லி வெச்சிங்கன்னு....

//"அது சரி... நேத்து நளினாவ 'பஸ்' ஏற்றிவிட்டுட்டு எத்தன மனிக்கு வந்த... எப்ப மறுபடியும் ஊருக்கு வரா?" //
வெச்சாண்டா ஆப்பு... பாரி, உனக்கு இது தேவைதானா... ஹிஹிஹி.... நளினாவ தெரிஞ்சவங்க கிட்ட நந்தினிய கூட்டியாண்டு போகும்போதே இத நீ எதிர்பார்த்திருக்கனுமில்லே... ஹ்ம்ம்... கதையோட்டத்துல இனி அனல் பறக்கும் போலிருக்கு!

வால்பையன் said...

மீண்டும் தமிழ் மணத்தில்?!!!!!!!!

எதாவது சேர்த்திங்களா?

வால்பையன் said...

நந்தினிக்கு வேலை கிடைத்தால் ட்ரீட் உண்டா?

வால்பையன் said...

முரளியை தனியாக கூப்பிட்டு உண்மையை சொல்லும் ஐடியா எதாவது இருக்கா?

வால்பையன் said...

இந்த இடியாப்ப சிக்கலிலும் எப்படி தொடர்ச்சியாக பதிவு எழுத முடிகிறது,

ஓ, பிரச்சனை பாரிக்கு தானோ!

M.Rishan Shareef said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் விக்னேஸ்வரன் :)

http://blogintamil.blogspot.com/2008/12/blog-post_31.html

இங்கே பாருங்கள்..தொடர்ந்து எழுதுங்கள் !