Monday, December 8, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (15)

அத்தியாயம் 15

"எத்தனை நாளைக்கு ஊர்ல இருக்க போறிங்க?", மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டேன்.

"தெரியலைப்பா... நான் போய்ட்டு போன் பண்றேன்".

காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஊரில் இருந்து அழைத்திருந்தார்கள். பாட்டிக்கு உடல் நலமில்லை. மாமாதான் தொலைபேசி இருந்தார்.

"நந்தினியையும் கூட்டிக்கிட்டு போறிங்களா?"

" இல்லைப்பா நந்தினி இங்கயே இருக்கட்டும். மாமா ஏதோ பேசனும்னு சொல்றாரு..."

காலையில் எழுந்து இன்னமும் முகம் கழுவாமல் பல் விலக்காமல் அரைத் தூக்க மயக்கத்தோடு அமர்ந்திருந்தேன். அம்மா கண்ணாடியில் தன்னை சரி செய்து கொண்டிருந்தார். அரை நூற்றாண்டைக் கடந்த வாழ்க்கை அவருடையது. அம்மா இன்னமும் திடகாத்திரமாக இருக்கிறார்.

அவரிடம் எப்போதுமே ஒரு மன உறுதி இருக்கிறது. அப்பா இறந்த பின் தனியாளாக தான் என்னை வளர்த்தார். எந்த சிரமமும் இல்லாமல் வளர்ந்துவிட்டேன். எத்தனை முறை அவரிடம் கோபித்துக் கொண்டுள்ளேன். சில சமயங்களில் அதை யோசிக்கையில் வருத்தமாக தான் இருக்கிறது.

"என்னப்பா தூக்கமா இருந்தா போய் படுத்துக்க. நான் கிளம்புறேன்''.

"இல்லைமா, 'அடுத்த மாசத்துல ஒரு 'பிராஜெக்ட்' ஆரம்பிக்க இருக்காங்க. நான் அந்த இடத்துக்கு போகனும். கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிகிட்டு மதியானம் தான் வருவேன்".

"மத்தியானம் வெளிய சாப்பிட்டுக்குவியா.... அப்படினா நந்தினிய ராத்திரிக்கு மட்டும் சமைச்சிட சொல்லு".

" ம்ம்ம்... இல்லைமா... இன்னிக்கு முதளாலி வீட்டுல 'டின்னர்' இருக்கு..." தயங்கி சொன்னேன்.

" ஹம்ம்ம்... வீட்டுல சாப்பிட உனக்கு அவளோ கஷ்டமா இருக்கு...".

வெளியே அப்பாவின் கார் ஒரு ஓரமாக இருக்கும். அதை அவ்வளவாக உபயோகிப்பதில்லை. பழுதுபடாமல் இருக்க அம்மா சந்தைக்கு போகவும், அவருடைய வேலைகளுக்கு உபயோகித்துக் கொள்வார்.

நானும் பல முறை சொல்லி இருக்கேன் அந்த காரை விற்று புதிய கார் வாங்க. அம்மா ஒப்புக் கொண்டதில்லை. ஏன் நான் சம்பாதித்து புதிதாக வீடு வாங்கிவிட்ட போதும் பழைய வீட்டை விற்க மறுத்துவிட்டார். கல்யாணத்துக்கு முன்பு அம்மா அங்குதான் இருந்தார். நான் கேலாலம்பூரிலேயே வேலை பார்த்து வந்தேன்.

நான் அப்பாவின் காரை சாவி கொடுத்து வைத்தேன். இயந்திரயம் சூடாகட்டும் என்று.

"தனியாதான் போக போறிங்களா... பார்த்து போங்கம்மா..."

"இவ்வளோ நாளும் தனியாதானெப்பா இருந்தேன்... இங்க அடி வாசலுக்கு போய்ட்டு வர என்ன இருக்கு".

நந்தினி அவ்வளவாக பேசவில்லை. தன் குடும்பத்தை பார்க்க அழைத்துச் செல்லாமல்விட்ட ஆதங்கமா என்றும் புரியவில்லை. அம்மா கிளம்புவதற்காக பணிவிடைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

"என்ன விசயமா மாமாகிட்ட பேசப் போறிங்க... என்கிட்ட கூடவா சொல்லக் கூடாது?".

அம்மா சிரித்து மட்டும் வைத்தார். வேறு பதில் இல்லை.

" நான் உன்கிட்ட என்னப்பா மறைக்க போறேன்...." நெடுமூச்செறிந்து மீண்டும் தொடர்ந்தார்.

"மாமாவுக்கு வயசாகிடுச்சு... அடிக்கடி உடம்புக்கு முடியாம போய்டுது.. தோட்டத்து வேலை எல்லாம் எதும் சரியா சொய்ய முடியரதில்லையாம்...".

எனக்கு 'பக்' என நெஞ்சி உறுதியது. இப்படி இருக்கும் மனிதனிடம் ஒரு வருடம் முடிந்து விவாகரத்து கதையை தொடங்கினா என்ன ஆவது?

"அப்ப தோட்ட வேலையெல்லாம் யார் பார்த்துக்கிறாங்க?"

"வேலைக்கு ஆள் வச்சி பார்த்துக்கிட்டாராம்... யாரும் சரியா வேலை செய்யறதில்லையாம்... கொஞ்ச நாள்ல விட்டுட்டு போட்டுறாங்களாம்... அதுவும் இல்லாம இந்த காலத்து ஆளுங்களுக்கு விவசாயத்துல நாட்டமும் இல்லாம போய்டுச்சி இல்லையா..."

அம்மா கிளம்ப ஆயத்தமானார். "பசியார செஞ்சி வச்சிருக்கேன். சாப்பிட்டு போங்க அத்தை" நந்தினி கூறினாள்.

"இல்லைமா... நான் சீக்கிரமா வீட்டுக்கு போய்டுவேன். அங்க சாப்பிட்டுக்கிறேன். இன்னிக்கு வீட்டில ஒன்னும் சமைக்க வேணா... பாரி ராத்திரி வெளிய போறானாம். நீயும் அவன் கூட வெளிய சாப்பிட்டுக்கோ..."

ஐய்யோ என்ன கதை இது... ஊருக்கு கிளம்புவதும் இல்லாமல் பிரச்சனையில் மாட்டி விட பார்க்கிறாரே... நான் எப்போது அவளை அழைத்து போவதாக சொன்னேன்.

"நான்..." பேச வாயெடுத்த மாத்திரத்தில் அம்மா தொடர்ந்தார்.

" நந்தினியயும் கூட்டிடு போப்பா... ராத்திரி அவ இங்க தனியா இருக்க வேணா... சரி நான் கிளம்புறேன்... போனதும் 'போன்' போடுறேன்".

எனக்கு நெருடலாக இருந்தது. நந்தினியின் முகத்தை பார்த்தேன். அவள் வாசலில் கிளம்பும் காரை பார்த்தபடி இருந்தாள். அவள் அங்கேயே நின்றிருந்தாள். நானும் வேலைக்கு கிளம்ப மேல் மாடியை நேக்கிச் சென்றேன்.

தொடரும்...

5 Comments:

VG said...

hahahahha amma aapu vacangala??

Anonymous said...

எப்படியோ அம்மாவை ஊருக்குக் கிளப்பியாச்சு..அடுத்து...

Unknown said...

அம்மா ஊருக்கு எத்த்னை நாள் போறாங்க விக்கி?

வால்பையன் said...

//நான் அப்பாவின் காரை சாவி கொடுத்து வைத்தேன். இயந்திரயம் சூடாகட்டும் என்று.//

எம்மாதிரியான கட்டுபாட்டிற்க்குள் வாசகர்கலை நீங்கள் வைத்து கொள்ள நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

சீரியல் போல இருக்கிறது, சினிமா மாதிரி ஆக்குமாறு கேட்டுகொள்கிறேன்

A N A N T H E N said...

பாரியோட அம்மா புராணம் நிறையவே இருக்கு... அம்மா பத்திரமா கார் ஓட்டிட்டு ஊருக்குப் போயாச்சா? எனக்கென்னவோ நீங்க சொன்ன விதத்த வெச்சி பார்க்கும்போது டவுட்டாவே இருக்கு....