Friday, October 31, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (11)

அத்தியாயம் 11

அன்றய தினம் காலையில் சிற்றுண்டியை சுவைத்துக் கொண்டிருந்தேன்.

"டேய் பாரி, சாப்பிட்டுட்டு நந்தினிய 'பேங்'கு அழைச்சிட்டு போ, பிறகு சலவைக்கு கொடுத்த உன் துணிகளை வாங்கிட்டு வந்திடு, இனி வீட்டிலேயே சலவை பண்ணிக்கலாம், உனக்கு ஒரு செலவும் மிச்சமா இருக்கும்"

"எதுக்குமா 'பேங்'கு?"

"அவ தங்கச்சி காலேஜ்ல படிக்கிறா இல்லையா அவளுக்கு பணம் போடனும்னு நந்தினி சொல்லிக்கிட்டு இருந்தா. இன்னிக்கு உனக்கு ஓய்வு தானே? கூட்டிட்டு போய்டு வாயேன்?"

முடியாது என நான் சொன்னாலும் அவ்விடத்தில் எடுபடாமல் தான் போகும். வாக்கு வாதம் நீளும். அதற்கு இடம் கொடுக்காமல் சரியென தலையசைத்து வைத்தேன்.

"அத முடிச்சிட்டு அப்படியே…" அம்மா தொடர்ந்தார்.

"ஐயோ அம்மா, என்ன இது காலையிலயே இப்படி தொல்ல பண்ணிகிட்டு இருக்கிங்க, ச்சே".

ஓய்வு நாட்களில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தவன். அம்மாவின் இப்பேச்சு என்னை எரிச்சலூட்டியது. குடும்ப சுமைகளுக்குள் அடைக்கப்படுவதாய் உணர்ந்தேன்.

"முதல்லதான் 'பசாருக்கு' போனிங்களே அப்பவே எல்லா வேலையும் முடிச்சிருக்க வேண்டிதானே?" நான் தொடர்ந்தேன்.

"டேய் அது சமையலுக்கு உள்ள பொருள் வாங்க போனேண்டா. வீட்டுக்கு தேவையான மற்ற பொருளை 'சூப்பர் மார்க்கேட்ல' தான் வாங்கனும், விடிஞ்சதும் யாரு 'சூப்பர் மார்க்கேட்' திறந்து வச்சிருக்கா? போற வழி தானே.. நீ ஒன்னும் வாங்க வேணாம் நான் நந்தினிகிட்ட சொல்லிட்டேன் அவ வாங்கிடுவா. நீ கூட்டிக்கிட்டு போனா போதும்."

நந்தினியை அழைத்துக் கொண்டு போனேன். வங்கியில் சேவை இயந்திரத்தில் பனத்தைச் செழுத்திவிட்டு, பேரங்காடிக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சலவைக் கடைக்குப் போனேன்.

"என்ன தம்பி துணி கொடுத்து ரொம்ப நாளாகுது இன்னிக்கு தான் வர?" சலவைக் கடை 'ஆண்டி' கேட்டார்.

"ஊருக்கு போயிருந்தேன் ஆண்டி. அதான் கொஞ்சம் லேட்" அவர் எடுத்து வைத்த துணிகளை பெற்றுக் கொண்டு பணத்தைச் செலுத்தினேன்.

"யாருப்பா இது? புதுசா இருக்காங்க?"

"என் மாமா பொண்ணு. பேரு நந்தினி. லீவுல வந்திருக்காங்க."

அங்கிருந்து கிளம்பினேன். இந்த ஆண்டி ஆள் கிடத்தால் ஊர் கதைகளை பேசும் ஆள். இவரிடம் பேசிக் கொண்டிருந்தால் நந்தினியின் வாயையும் கிண்டி விடுவார். அது நல்லதர்கல்ல.

"அந்த அண்டிக்கு ஒரு பொண் இருந்தா. ஒரு ஆக்சிடண்ட்ல இறந்துட்டா. அவுங்களுக்கு பெண் பிள்ளைங்கனா ரொம்ப பிடிச்சி போகும்".

அவளிடம் சொல்லிக் கொண்டு வந்தேன். ஏதாவது பேசுவோம் எனும் எண்ணத்தில் பேசினேன். எதிரில் ஒரு தேனீர் கடை தெரிந்தது. நந்தினியை தேனீர் சாப்பிட அழைத்தேன்.

"என்ன சாப்பிடுற?"

"எனக்கு காபி போதும்" என்றாள்.

"நந்தினி நம்ம பிரச்சனைய சீக்கிரமா தீர்த்தாகனும். ரெண்டு பேருமே அமைதியா இருக்கிறது யாருக்கும் எந்த நன்மையும் இல்ல. நம்ம வாழ்க்கை தான் பாதிக்கும்", நானே ஆரம்பித்தேன்.

"நமக்கு நடந்தது எல்லாம் உனக்கு தெரியாம இல்ல.." மேலும் தொடர்ந்தேன்.

"பாரி, சின்ன வயசுல நம்ம வாழ்க்கை வேற ஆனா இப்ப அப்படி இல்லை. பொறுப்புகள் அதிகமாகுது. சுமத்தவும்படுது. நமக்கு நடந்த கல்யாணமும் அப்படிதான். கொஞ்சமும் யோசிக்காம நம்ம குடும்பத்த நீ காப்பாத்தினதுக்கு நன்றி".

"அது மாமாவுக்காக நந்தினி…" அவள் மொல்லிய புன்னகையை சிந்தினாள் அதன் அர்த்தம் அவளுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்.

"நாம சொந்தம்கிறது மட்டுமே என் மனசுல ஊறி இருக்கு நந்தினி… எந்த காலத்திலும் அது மட்டுமே எனக்குள்ள உறுதியா இருக்கு. இந்த நிமிசம் வரை நடந்துகிட்டு இருக்கிறதெல்லாம் கனவு போலவே இருக்கு. நமக்குள்ள வேற வேற கனவுகள் இருக்கலாம், ஆன கண் சிமிட்டும் நேரத்தில் எல்லாமே மாறி போய்டுச்சு".

"உன் வாழ்க்கையை தெந்தரவு செய்ததற்கு என்னை மன்னிச்சிரு பாரி. நடந்தது எல்லாமே எதிர் பார்க்காத விஷயம் தான். எதுவுமே நாம் விரும்பி நடக்கறதில்லை", என்று சொல்லியவளின் கண்களில் நீர் துளித்திருந்தது. அதை மறைக்கும் விதமாய் பார்வையை வெளியே படரவிட்டாள்.

"இந்த விசயத்தில் நான் நேர்மையானவனா நேர்மை இல்லாதவனானு எனக்கே ஒன்னும் புரியல நந்தினி. என்னை பொருத்த வரை நான் எதுக்கும் தயாரகளைன்றது தான் நிஜம்".

"நடந்ததுலாம் கசப்பான சம்பவம் தான். எல்லாதுக்கும் நன்றி பாரி". நான் பேசுவது ஒன்றாகவும் அவள் சொல்லும் பதில் ஒன்றாகவும் இருந்தது. என் மனதில் இருப்பதை அவள் புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை.

"தப்பு நம்ம மேல இல்லை பாரி. எல்லாம் சூழ்நிலை காரணமா நடந்தது தான். இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம். எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பாகனும். கல்யாணம்ற பேர்ல நாம கடைசி வரை சேராமல் போனாலும் நான் ஏத்துக்கிறேன்… ஆனா…" மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தவர் சற்றே நிறுத்தினாள்.

"ஆனா என்ன?"

"உடனடியான பிரிவு நமக்கு வேண்டம்னு தோணுது பாரி, எனக்காக இத நீ ஒத்துக்குவியா? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.. 'அட் லிஸ்ட்' இந்த வருடமாவது ஆகட்டும். நம்ம தீடீர்னு பிரிஞ்சி போனா அப்பா ரொம்ப பாதிக்கப்படுவாரு". என்றாள்.

"ம்ம்.. நான் நாம் பிரியனும்னு சொல்லல நந்தினி…" நான் பேசுவதறியாமல் உளர ஆரம்பித்தேன். மாமாவின் முகம் ஒரு கனம் என் நினைவை வெட்டிச் சென்றது.

"எனக்கு புரியுது பாரி… விதி வசத்தால் நாம் பிரியனும்னா நான் ஏத்துக்குவேன். அதுவே நாம் சேர்ந்து வாழனும்னு வந்தா, இப்ப உள்ள நிலைமைல நாமே நம்மை கொடுமை படுத்திக் கொள்றதுக்கு சமமாதான் கடைசி வரை அமையும்". என்னால் என் நிலை அறிய முடியவில்லை. ஆனால் அவளின் பேச்சு அவள் தெளிவாக இருப்பதையே குறித்தது.

" 'ஐஆம் சாரி' ".

"நானும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் பாரி, இப்போதைக்கு இந்த மன்னிப்பு மட்டும் தான் நமக்கு ஆறுதல். இனிமேலாவது நாம நாமளா வாழ முயற்சி செய்யலாம்", அவள் என்னை பார்த்து புன்னகைத்தாள். நான் இன்னமும் சுவைக்கப்படாமல் வைத்திருக்கும் தேனீர் கோப்பையை நோக்கியபடியே இருந்தேன்.

"ம்ம்ம்… பாரி ஒரு உதவி செய்வியா?"

"உதவியா… என்ன உதவி நந்தினி?" நெற்றியைச் சுறுக்கினேன்.

"நாளைக்கு நான் வீட்டுக்கு போறேன். என்னை 'பஸ்' ஏற்றி விடுறியா?".

என்னை திகைக்க வைத்தாள். அவளை பார்க்க பாவமாக இருந்தது. ஒரு புரம் ஏதோ ஒரு சுமையில் இருந்து நான் தப்பும் துருப்புச் சீட்டு கிடைக்கப் போவதாகவும் உணர்ந்தேன்.

தொடரும்…

Thursday, October 30, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (10)

அத்தியாயம் 10

தூக்கம் வரவில்லை. விருந்தில் எடுத்த சிறிது உணவையும் சரியாக சாப்பிடாத காரணத்தினால் நன்கு பசித்திருந்தேன். மதியம் அம்மா சொன்ன நண்டு பிரட்டல் நாக்கில் எச்சிலை ஊற வைத்தது. நண்டை உறிந்துக் கடிக்கும் ருசியே தனியாயிற்றே. சரி கொஞ்சம் ருசி பார்ப்போமே எனக் கிளம்பினேன்.

நான் படுத்திருந்த அறையைவிட்டு வெளிவந்தேன், நந்தினி நன்கு தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். சமையற்கட்டை நோக்கி விரைந்தேன். இன்னமும் அந்த நண்டு பிரட்டல் இருக்குமா? இல்லை காலியாய் போயிருக்குமா? நான் முதலில் காட்டிய வீராப்பிற்காக அம்மாவும் நந்தினியும் சாப்பிட்டு முடித்திருப்பார்களா?

மூடு வலையை எடுத்துப் பார்த்தேன். வீராப்பின் வினை அங்கு படுத்துறங்கிக் கொண்டிருந்தது. கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. அடுப்பின் மீதிருந்த சட்டியைத் திறந்தேன். பிரட்டிய நண்டின் மணம் மூக்கை துளைத்து நாக்கில் வடிந்தது. கொஞ்சமாக சோற்றை போட்டுக் கொண்டு நிறைவாக நண்டு பிரட்டலையும் போட்டுக் கொண்டேன். அமைதியாய் அமர்ந்துச் சாப்பிட ஆரம்பித்தேன். இச்சமயம் யாரும் வராதிருத்தலே நலம் என நினைத்துக் கொண்டேன்.

மேசை மீதிருந்த கிண்ணத்தில் நீரை நிரப்பினேன். என்னைச் சுற்றினும் வெளிச்சம் பரவுவதை உணர்ந்தேன்.

"பாரி என்னய்யா இது, இருட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுகிட்டு இருக்க", அம்மாவின் இக்கேள்வி எனக்கு வெட்கமாய் போய்விட்டது.

" யாராவது திருடன் வீட்டில் புகுந்துட்டானோனு பயந்துட்டேன். சரி, எத்தன மணிக்கு வீட்டுக்கு வந்த?"

"12 மணிக்கு மேலாச்சிமா".

"விருந்துக்கு தானே போறேனு சொன்ன? இப்ப என்னடானா சாப்பாட்டுத் தட்டோடு உட்கார்ந்திருக்க. ரொம்ப பசியாப்பா, இன்னும் சோறு வைக்கவா?"

"அங்க சாப்பாடு சரியில்லமா, அதான் சரியா சாப்பிடல".

"நண்டு பிரட்டல் சாப்பாடுத் திருப்தியா இருக்கா?" நக்கலாக கேட்டார்.

"நீங்க இன்னும் தூங்கலையா?" சாப்பாட்டை முடித்துக் கொண்டு கைகழுவிக் கொண்டிருந்தேன்.

"முதல்லயே தூங்கிட்டேம்பா. நண்டு சாப்பிட்டதும் உடம்பு சூடு தாங்கல. சரியான தாகமா இருக்கேனு தண்ணி குடிக்க வந்தேன்".

" சரிப்பா நான் போய் படுக்கிறேன். நீயும் தூங்கு".

அமைதியாக சாப்பிட்டுவிட்டு போகலாம் என நினைத்தேன். நடக்கவில்லை. நல்ல வேலை வந்தது அம்மா. நந்தினி இல்லை.

வெளிச்சம் பட்டு கண் விழித்துப் பார்த்தேன். சன்னல் திரையை விலக்கிவிட்டதினால் அதீத சூரிய ஒளி வீட்டில் குடி புகுந்து என் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. சோம்பல் முறித்தெழுந்து சுதாரித்துக் கொண்டேன். வரவேற்பறையில் இருந்த சொகுசு நாற்காலியில் தூங்கிப்போய்யிருக்கிறேன். இரவு சாப்பிட்டக் களைப்பில் இங்கேயே படுத்துவிட்டேன் போல.

கடிகாரத்தைப் பார்த்த போது மணி ஏழாகியிருந்தது. சமயற்கட்டின் பக்கம் திறந்து வைக்கப்பட்டிருந்த வானொலியின் செய்தியறிக்கை அதை மேலும் உறுதிப்படுத்தியது. சமைலறையை நோக்கிச் சென்றேன். அங்கு யாரும் இல்லை. பின் திருப்பியபோது நந்தினி அங்கு வந்திருந்தாள்.

"அம்மா எங்க நந்தினி?" காற்றடைத்துக் கொண்டதைப் போல் என் குரல் மெல்லமாய் வந்தது. இவளோடு நான் பேசுகிறேனே. அது எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. காலையிலேயே குளித்து வழிபாடு செய்துவிட்டு மிக எழிலோடு இருந்தாள்.

" 'மார்க்கெட்டுக்கு' போயிருக்காங்க அத்தான்", என்றாள்.

அவள் பதில் எனக்கு வேம்பாக இருந்தது. என்னை அத்தான் என அழைக்கிறாளே. என்ன வார்த்தை இது. அத்தான் பொத்தான் என சொல்லிக் கொண்டு. முன்பெல்லாம் பாரி என்றுதானே அழைப்பாள். பெயருக்கு திருமணம் நடந்துவிட்டால் மரியாதையோடு அழைத்திட வேண்டுமா என்ன.

"பசியார எடுத்து வைக்கட்டுமா அத்தான்", மீண்டும் அந்தச் சொல்லை சொல்லியேக் கேட்டாள். பல் துலக்காதவனுக்கு பசியாறை ஒரு கேடா. நான் பதில் ஏதும் பேசமல் அவளை நோக்கினேன். அவளையே பார்த்திருந்தேன். அவளோடு பேச வேண்டுமேன இருந்தது. என்ன பேசுவதென்று தெரியவில்லை.

இந்தத் தனிமை ஆபத்தானது தான் போல. இச்சூழல் என்னை அவளோடு நெருங்க வைக்கிறதே.

"அம்மா போய் ரொம்ப நேரமாகுதா?"

"இல்லைங்க கொஞ்ச நேரம் முன்னாடிதான். சீக்கிரம் வந்திடுறதா சொன்னாங்க". அவள் குரலில் நடுக்கமும் பயமும் கலந்திருந்தது.

இனி என்ன கேட்பது என தெரியவில்லை. அவளோடு பேசுகையில் என் பேச்சில் இருக்கும் தடுமாற்றத்தையும் நடுக்கத்தையும் அவள் உணராதிருத்தலே நலம். அது என் கௌரவ பிரச்சனையும் கூட. மேல் மாடியில் இருக்கும் எனதறைக்கு விரைந்தேன்.

அறை முற்றினும் மாறுபட்டிருந்தது. அது நந்தினியின் கைவண்ணமாகத் தான் இருக்க வேண்டும். நல்லவிதமாக அழகுபடுத்தி வைத்திருந்தாள். கட்டிலின் தலைப்பகுதிக்கு மேல் நான் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கிய பெரிய படம் ஒன்றும் அதச் சுற்றினும் சிறு சிறு படங்களும் மாட்டி வைக்கப்பட்டிருந்தன.

அந்த நாட்கள் மிகவும் இனிமையானது. நானாக விரும்பிக் கேட்டாலும் அந்நாட்கள் திரும்பிக் கிடைக்கப் போவதில்லை. மகிழ்சியின் எல்லையை அனுபவித்தது அக்கல்லூரி பருவ நாட்களில் தான்.

குளித்துவிட்டு கீழிறங்கிய போது அம்மா வந்துவிட்டிருப்பதைப் பார்த்தேன். பிளாஸ்டிக் பைகளில் இருந்த சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

Monday, October 13, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (9)

அத்தியாயம் 9

நளினாவின் கேள்வி என் சிந்தனையை ஊருக்கு இட்டுச் சென்றது
. அது நந்தினியையும் என் நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது. என் கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. நந்தினி எனக்காக காத்திருப்பாளா? இல்லை தூங்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். விழித்திருந்தாலும் இருக்கலாம். ஆனால் அப்படி இருக்காது என்றே மனம் சொல்கிறது. எனக்கு காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்பதை அவள் புரிந்துக் கொண்டிருப்பாள்.

நீ என்னை உன் ஊருக்கு கூட்டிக்கிட்டு போவனு ரொம்ப எதிர் பார்த்தேன். ஆனா நீ ஒரு தடவை கூட என்னைக் கூப்பிட்டதே இல்லை.

அப்படி இல்ல.. கிராம வாழ்க்கை உனக்கு ஒத்து வாரதுன்னு தான் கூப்பிடல.

உன் கிராமம் அவ்வளோ மோசமானதா?.

மோசமான கிராமம் இல்லை. நீ இரசிக்கும்படியா ஒன்னும் இருக்காது. போர் அடிச்சிடும்.

ம்ம்ம்… அப்படினா உங்க அம்மாவைப் பார்க்கவாவது அழைச்சிகிட்டு போகலாம் தானே?

எதிர்பார்த்த கேள்விதான்
. இக்கேள்வியின் தாக்கத்தில் வாயில் வைத்த உணவுக் கூடத் தொண்டையில் இறங்க மறுத்துவிட்டது. கிண்ணத்தில் இருந்த நீரை பருகிவிட்டு அவளைப் பார்த்து ஒரு போலி சிரிப்பை உதிர்த்தேன். இந்நாள் வரையில் நளினாவைப் பற்றி அம்மாவிடம் ஒரு வார்த்தையும் கூறியது இல்லை. சொல்லவும் நினைத்ததில்லை.

அப்படி அழைத்துச் சென்றாலும் அம்மா திகைத்துப் போகலாம். நவநாகரிக வாழ்க்கை வாழ்ந்த நளினாவின் போக்கு அவருக்குப் பிடிக்காமலும் போகலாம். அப்படியிருப்பின் கண்டிப்பாகக் கல்யாணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார். வருத்தமும் படுவார்.

எப்ப போகலாம்?.

எங்கே போகனும்?. அவளது எல்லாக் கேள்விகளும் எனக்குக் கஷ்டமானக் கேள்விகளாகாவேத் தோன்றின.

உங்க அம்மாவை பார்க்க தான்.

எச்சிலை விழுங்கினேன்
. என்னதான் சொல்லித் தொலைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. ‘ஆம் என சொல்லி அவளை அழைத்துச் சென்றால் என்ன ஆகும். போதாக் குறைக்கு என் மனைவி என அடையாளமிடப்பட்டிருக்கும் ஒருத்தியும் உடன் இருக்கிறாளே. அப்படி அழைத்துச் சென்றால் ஓர் உலகப் போர் நடந்தாலும் நடக்கலாம்.

நேரம் வரட்டும் கண்டிப்பா அழைச்சிட்டு போறேன். சரியா, நான் அவள் கைவிரல்களை என் கையோடு அணைத்த படி சொன்னேன். அவள் அமைதி காத்தாள். அவள் கேள்வி ஏமாற்றமாய் போனதும் காரணமாக இருக்கலாம்.

மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது
. நளினாவை அவள் தங்கியிருக்கும் வீட்டினருகில் இறக்கிவிட்டேன். என்னை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தாள். கையசைத்துவிட்டு வீட்டில் நுழைந்தாள். நானும் ஒரு புன்னகை பரிசைக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி விரைந்தேன்.

நான் நளினாவோடு பழக ஆரம்பித்த போது இனி என் வாழ்க்கை இவளோடு மட்டும் தான் என நினைத்திருக்கிறேன்
. இப்போது எல்லாமே மாறிவிட்டது. இந்த நாடகத்தின் முடிவும் அறிந்தபாடில்லை. அது எனக்குச் சாதகமாகவே இருக்க வேண்டும் என்ற சுயநலமும் என்னுள் இருந்துக் கொண்டே இருக்கிறது. தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்வதா இல்லை புதிய வாழ்க்கையை தொடங்குவதா என்றக் கேள்வியும் அடிக்கடி எழும்பிச் செல்கிறது.

நளினா தன் அப்பாவிடம் சொல்லப் போகிறேன் என சொன்ன போது நான் தடுக்கவில்லை
. அவள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் என்று தானே இதற்கு அர்த்தம். எனக்கும் அதில் உடன்பாடு இருக்கிறது என்றும் அவளுக்கு நம்பிக்கைக் கொடுக்கும் விதமாகவே நான் நடந்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

எனக்கு இந்நிலை ஏற்பட்டக் காரணம் திருமணம் எனும் பந்தம். அது ஏற்படக் காரணமாக இருந்தது நந்தினியின் திருமணத்திற்கு வராமல் போன மாப்பிள்ளை. இச்சமயம் நான் அவனைப் பார்க்க நேர்ந்தால் கொலைச் செய்யவும் தயங்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.

என் இரண்டடுக்கு மாடி வீட்டின் வளாகத்தினுள் நுழைந்தேன். அறையின் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. நந்தினி இன்னமும் தூங்காமல் தான் இருக்கிறாள் போல. வீட்டிற்கு வந்தால் சுதந்திரம் பறி போனதை போல் தோன்றுகிறது. எனக்குள் ‘இச் என்ற சளிப்பைக் கொட்டிக் கொண்டேன். எப்படி அறைக்குள் போவது. அவள் இருப்பாளே. என்னப் பேசுவது. எனக்காகதான் காத்திருக்கிறாளோ.

வாசல் கதவைச் சாத்திவிட்டு என் அறையை நோக்கி சப்தம் இல்லாமல் நடந்தேன். இருதயம் ‘பட் பட் என அடித்துக் கொண்டது. மெல்லமாக கதைவைத் திறந்தேன். அறையில் அமைதி குடிக் கொண்டிருந்தது.

நந்தினி நன்கு தூங்கிவிட்டிருந்தாள். எனக்குக் காத்திருந்திருக்க வேண்டும் அதனால் தான் விளக்கையும் அணைக்காமல் அப்படியே தூங்கிவிட்டிருக்கிறாள். அவளுக்கு நிலவை போல் குளிர்ச்சியான முகம். தூங்கும் போது கூடப் பார்ப்பதற்கு சிரித்தபடியே இருந்தாள். இந்த அழகு பதுமையையும் மணம் புரிய வராமல் போன அந்த மானங்கெட்டவனை என்னவென்று சொல்வது.

சாவிக் கொத்தை எடுத்து சிறிய அறையின் கதவைத் திறந்தேன். அந்த அறை எனது சிறு நூலகம் என சொல்லலாம். எனது கணினி புத்தகங்கள் என குவித்து வைத்திருப்பேன். இந்த அறையில் எனது ராஜாங்கம் மட்டும் தான். அம்மாவும் வரமாட்டார். ஊரில் இருந்து கிளம்பிய நாளிலிருந்து இந்த அறையில் தான் எனது அர்த்தமற்ற இராத்திரிக் கனவுகளை வளர்த்து வருகிறேன். நான் படுப்பதற்கு மட்டும் போதுமான அறை அது.

இந்த அறையை எப்போதும் பூட்டி வைத்துவிடுவதால் அதை சுத்தம் செய்யும் அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. இப்போது கூட பூட்டிதான் வைத்திருக்கிறேன். இதற்கு காரணம் நான் நல்லவன் என அடையாளமிட்டுக் கொள்வதற்கு இல்லை. என்னையே என்னால் சில சமயங்களில் நம்ப முடியாது என்ற காரணம் தான். நானும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட சாதாரண மனிதன் தானே. நினைவுகளை தூரத்திவிட்டு கண்களை மூடினேன்.

தொடரும்...

Thursday, October 9, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (8)

அத்தியாயம் 8


"பாரி" என் காதருகில் மெல்லிய குரல்.


"அமைதியாவே இருக்கியே? என்னாச்சு? என் 'டிரஸ்' பிடிக்கலையா?"


"நீ ரொம்ப அழகா இருக்க, அதான் வாயடைச்சி போய்டேன்" புன்னகையோடு அவளிடம் கூறினேன்.


"உனக்கு பசிக்கலையா? எனக்கு பசிக்குது" கொஞ்சலாக சொன்னாள்.


"சரி வா சாப்பிடலாம்" என அவளை இழுத்துக் கொண்டு போனேன்.


"நீ சாபிடலையா?"


"சாப்பிடுறேன், ஆனா கொஞ்சமா. கல்யாணம் பண்ணுற வரைக்காவது தொப்பை இல்லாமல் இருக்கனும் இல்லையா".


"கல்யாணத்துக்கு திட்டம் போட்டாச்சா?" அவள் கேட்டாள். தவறான வார்த்தையைப் பேசியதாக உணர்ந்தேன்.


எதுவும் பேசாமல் அவள் கண்களை மட்டும் உற்றுப் பார்த்தேன்.


"அப்படியெல்லாம் இல்லை, வார்த்தைக்குச் சொன்னேன்".


"ஏன்? எனக்கு தெரிஞ்சிக்கனும். நம்ம எதிர்காலத்தை பற்றி என்ன சிந்திச்சி வச்சிருக்க?"


"சரி என்ன சாப்பிடப் போற நான் உனக்கு எடுத்து வைக்கிறேன்"


" எனக்கு முதலில் பதில் சொல்லு" அவள் முகம் பார்க்க என்னை இழுத்தாள்.

இது எனக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலையாகவே தெரிந்தது. மிக எரிச்சலான கேள்வியைக் கேட்டுத் தொலைக்கிறாளே என மனதுள் வெந்தேன்.


"நளினா, கல்யாணத்தப் பற்றி இப்ப என்ன பேச வேண்டி இருக்கு? இன்னும் வயசிருக்கு. நான் அதுக்கு இன்னும் 'ரெடியாகல".


" நான் 'ரெடியா' இருக்கேண்டா".


"சரி 'ஜோக்' அடிச்சது போதும். முதல்ல சாப்பிடு".


"நான் 'சீரியஸா' பேசுறேன், உனக்கு என்ன பிடிச்சிருக்கா இல்லையா? என்னை காதலிக்கிறதானே?".


வெட்கப்பட்டுக் கொண்டு கேட்டாள். அவள் ஈரவிழிகளில் விட்ட அம்பு என்னைத் துளைத்தது.

"என்ன பதில் பேச மாட்ற, நான் என்னைப் பார்க்க சொல்லல, பதில் சொல்ல சொன்னேன்".


" உன்னை நான் ஆசை படுறத உன்னால புரிஞ்சிக்க முடியலையா நளி".


"அதை நீ வாய் திறந்து சொல்லனும் இல்லையா?".


"ஆமாவா?".


அவள் மெல்லிய புன்னகை புரிந்தாள்.


"இதெல்லாம் சொல்லிதான் புரியனுமா என்ன?".


"நீ சொல்றத கேட்க எனக்கு ஆசையா இருக்குடா".


" ம்ம்ம்பிறகு ஒரு நாள் சொல்றேன்".


"எப்போ".


" உன்னைக் கட்டிக்கிட்ட பிறகு".


இந்த பதிலை சொன்னதும் என் மனசாட்சியை நானே செருப்பால் அடித்துக் கொண்டத்தை போல் இருந்தது. ஏன் இப்படி நடந்துக் கொள்கிறேன். எனக்குத் திருமணமாகிவிட்டது. எனக்கே நான் போலி முகம் போட்டுக் கொண்டு நடிக்கிறேனே. எவ்வளவு துன்பகரமானது இந்த வாழ்வு.


இப்போதைக்கு நளினாவை சமாதானப்படுத்தப் பேசிவிட்டேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே சமாளிப்பது. ஒரு வழியாக இப்போதை கண்டத்தில் தப்பித்துவிட்டேன். இதுவே ஒரு சாதனை தான்.


உணவை எடுத்துக் கொண்டு ஒரு இடம் பார்த்து அமர்ந்தோம். மெல்லிய வெள்ளை விளக்கொளியோடு இரவு பணியும் அச்சூழலை மிகக் குளிர்சியாக வைத்திருந்தது. இரம்மியமான சூழல். என்னோடு என் மனமும் அதை இரசித்தது.


நளினாவின் பார்வை என்னை விட்டு அகலவில்லை. அந்தச் சிறு விழிகள் என்னையே பார்ப்பது மனதிற்குள் சுகமாக இருந்தாலும் ஏதோ ஒன்று உறுத்தியது.


" என்ன! என்னை சாப்பிடுற மாதிரி உத்துப் பார்த்துக்கிட்டு இருக்க". அவளிடம் கேட்டேன்.


" ம்ம்.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.." அவள் முகத்தில் வெட்கம் இருந்தது.


அவளது பதில் என்னை அசடு வழியச் செய்தது. அவள் மீண்டும் தொடர்ந்தாள்.


"நான் அடுத்த வாரம் வீட்டுக்குப் போறேன்".


"என்னாச்சு வேலைப் பிடிக்கலையா. வீட்டோடு இருக்க போறியா?"


"இல்லடாஅப்பாவ பார்க்கப் போறேன். அப்பாகிட்ட நம்ம பத்தி சொல்லப் போறேன்".


அவள் சொல்லியது என்னவென எனக்கு உள்ளங்கை நெல்லிக் கனியாக விளங்கியது. இருந்தாலும் ஒன்றும் விளங்காதவனைப் போல் கேட்டேன்.

"நம்ம பத்தியா! என்ன சொல்ல போற?". என் எச்சிலை தொண்டைக் குழிக்குள் விழுங்கினேன்.

"எல்லாம் நம்ம விசயம் தான். உனக்கு என்ன பிடிச்சிருக்கு. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. நீ என்ன நேசிக்கிற. நான் உன்ன நேசிக்கிறேன். இப்படி சொன்னால் போதும். அப்பா புரிஞ்சிப்பாருனு நினைக்கிறேன்".


"அப்புறம்?".


"அப்புறம் என்ன அப்பா நமக்கு சம்மதம் சொல்லிடுவாரு".


இதைத்தான் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது என சொல்வார்களா? என் நிலைத் தெரியாமல் பேசுகிறாள். தெரியவும் வேண்டாம் எனவே நான் நினைக்கிறேன். அவளது அப்பாவிடம் சொல்லி என்ன ஆகும்? என்னைப் பிடிக்காமல் போக என்னைத் தேடி வந்து உதைக்கலாம். இல்லையென்றால் சம்மதம் தெரிவித்து கல்யாணம் செய்துவிக்க முற்படலாம்.


"வீட்டில் அப்பாவ சமாளிச்சிடலாம். அம்மா தான் கொஞ்சம் கஷ்டம். அதான் முதலில் அப்பாகிட்ட சொல்லி அம்மா காதில் போட்டு வைக்க ஏற்பாடு பண்றேன்" அவள் தோளை உழுக்கி மீண்டும் வெட்கம் கொண்டாள்.


உண்மையைச் சொன்னால் எனக்கு அவள் பேசியது கடுப்பை தான் ஏற்படுத்தியது. துளியளவும் மகிழ்ச்சியில்லை. இந்த ஏற்பாடு நடக்காமல் இருந்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்.


"நீயும் வரீயா?". என் கைகளைப் பற்றிக் கேட்டாள்.


"ம்ம்ம்இல்லை கஷ்டம்எனக்கு 'லீவு' கிடைக்காது. இன்னும் 'ஆபீஸ்' வேலை எல்லாம் அப்படியே நிற்குது". முடிந்த அளவிற்கு சமாளிக்கப் பார்த்தேன்.


"சரி நீ எப்போ கிளம்பற?"


"அதான் சென்னனே, அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை. நீதான் என்னை வழியனுப்பனும். நீ ஊருக்குப் போகலையா?".


அந்தக் கேள்வியில் ஒரு விஷமம் இருந்தது.


தொடரும்...