Thursday, November 20, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (13)

அத்தியாயம் 13

யாருக்குத் தான் பிரச்சனையில்லை. நமது மனம் ஆறுதல் பெற ஒரு தோள் கிடைக்குமா என ஏங்குகிறோம். அவருக்கு என்ன பிரச்சனையோ என அறிவார் இல்லை. முரளி என்னை நாடிய போது எனக்கு அப்படித்தான் தோனியது.

"சொல்லு... மறுபடியும் 'லவ்'ல பிரச்சனையா?"

"இல்லை டா! எங்க அம்மா தான்... அவுங்களுக்கு தெரிஞ்சவங்க மகளுக்கு என்னைக் கல்யாணம் பேசி முடிக்க நினைக்கிறாங்க..".

"நல்ல விசயம் தானே?".

"என்னடா நல்லது? உனக்கு தான் என்னைத் தெரியுமே! யாருன்னே முகம் தெரியாதவங்கள எப்படிடா கல்யாணம் பண்ணிக்க முடியும்? அதுவும் பெரியவங்களுக்கு நம்ம 'டேஸ்ட்' தெரியாது...".

"நீ பொண்ணப் பார்த்தியா
?" அவன் இல்லையெனத் தலையசைத்தான்.

"பார்க்காம எப்படி முடிவு பண்ணுன
?"

" எதுக்குடா பார்க்கனும்
?... எனக்கு விருப்பமில்ல... அம்மாவோட தொந்தரவு தான் தாங்க முடியல... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க... இப்ப எனக்கு 28 வயசு தான் ஆகுது... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறேன்".

எனக்கு 25 தானே ஆகிறது... கணவன் எனும் முத்திரை என் மீது குத்தப்பட்டுவிட்டது. இது இவனுக்கு தெரிந்தால்...
?

" இந்த வயசுல கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எப்பதான் பண்ணிக்க போற
?"

" தெரியல.. ஆனா இப்ப நான் தயாரா இல்லை".

" ஒரு பொண்ணயாவது உருப்படியா காதலிச்சிருக்கியா
? 'லவ்' பண்ணி கொஞ்ச நாள்ல பிரச்சனைனு சொல்லுவ... மறுபடியும் அடுத்தவ...".

" நீ பேசுவடா... எனக்கும் உன்னை மாதிரி
'லவ்வர்' கிடைச்சா நான் ஏன் புலம்ப பொறேன்... உனக்கு என் கவலை புரியாது".

முரளியின் பேச்சு எனக்கு நகைச்சுவையாக இருந்தது. எப்படிப்பட்ட பெண்ணாகட்டும்
, கொஞ்ச நாளில் பிரச்சனை, சண்டையெனச் சொல்லி விலகிக் கொள்வான்.

இந்த முரளி ஆண்களை வர்ணிப்பதை போல் தும்பி இனத்தைச் சேர்ந்தவன் என நினைக்கிறேன். இரண்டு மூன்று மாதத்திற்கொரு முறை அடுத்த பூவிற்கு தாவிவிடும் ரகம். சட்டையை மாற்றுவது போல் பெண்களை மாற்றிக் கொள்ளும் அவனுக்கு எந்தச் சட்டை சரியாய் இருக்குமென அறிவார் இல்லை. அவனை பேசிச் சமாளிக்க போதும் போதும் என்றாகிவிட்டது.

"சரி இந்த வாரம்
'சாட்டர்டே' 'ஃப்ரியா' இருப்பியா?".

"வெள்ளிக்கிழமை ராத்திரி நளினாவ வழியனுப்ப போறேன். வர
'லேட் ஆகும்.சனிக் கிழமை 'ஃப்ரியா' இருப்பனானு தெரியல".

"
நளினாவ எங்க வழியனுப்ப போற?"

"
அவ ஊருக்கு போறா".

"
அப்படினா நீ மறுபடியும் 'பேச்சுலர்'னு சொல்லு. பிரச்சனை இல்ல ஊர் சுத்தவும் ஆட்டம் போடவும் நான் 'ஜாய்ன்' பண்ணிக்கிறேன்". என்றான் கிண்டலாக.

நான் ஒன்றும் பேசாமல் சிரித்துமட்டும் வைத்தேன்.

அவன் மேலும் தொடர்ந்தான். "அப்படினா சனிக் கிழமை ராத்திரி உன் வீட்டுக்கு வந்திடுறேன். "பார்ட்டிய' 'ஓப்பன்' பண்ணிடலாம் 'ஓகேவா' ?".

சில காலமாக நான் மது அருந்துவதை விட்டுவிட்டேன். ஏன், எதனால் என்ற காரணங்கள் தெரியவில்லை. அவன் அப்படி கூறியதும் வீட்டில் சூழ்நிலை ஞாபகத்துக்கு வந்தது. அம்மாவும் நந்தினியும் உடன் இருக்கும் சமயத்தில் இந்த ஜந்து அங்கே வந்து தொலைத்தால் என் கதி அதோகதிதான்.

"
வேண்டாம் மச்சான். கஸ்டம்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..." பட படவென வார்த்தைகளை உதிர்த்தேன்.

முரளியின் முகம் சுருங்கியது. என்ன நினைத்திருப்பான் என தெரியவில்லை.

"
சரி மச்சான்... நான் 'ஃப்ரியா' இருக்கும் போது உன் வீட்டு பக்கம் வந்துட்டு போறேன்."

"
எதுக்கும் வரத்துக்கு முன்ன எனக்கு போன் போடு", என்றேன்.

**********************

நந்தினியின் முகத்தைப் பார்த்தேன். பூசினாற் போன்ற முகம். பல வருடங்களுக்கு முன் பார்த்தைவிட எழில் மிகுந்து இருந்தாள். கண்களை மூடி தூங்கி இருந்தாலும் அதில் ஒரு வசீகரம் இருந்தது. அழகிய கழுத்து. காற்றாட விழுந்திருக்கும் அவள் கூந்தல்...

குரலை கனைக்கும் சத்தம் கேட்டது. அம்மா நின்றிருந்தார்.

"
அவளை எழுப்பாதட பாரி... பாவம் பயண களைப்புல அசந்து தூங்குறா..."

யார் எழுப்பினார்கள். இவள் ஏன் வரவேற்பு அறையில் இருக்கும் மெத்தை நாட்காலியிலேயே தூங்குகிறாள் என்று தான் பார்த்தேன். இச்சமயம் அம்மா என்னை பார்த்தது தான் வெட்கமாக போய்விட்டது. அம்மாவிடம் ஏதும் பேசாமல் மேல் மாடியில் இருக்கும் என் அறையை நோக்கி விரைந்தேன்.

"
தண்ணி சாப்பிடலையாப்பா?"

"
இருங்கம்மா குளிச்சிட்டு வரேன்", சோர்வாக பதிலளித்தேன்.

அறையில் புகுந்தவுடன் எதிரே இருந்த மெத்தை மீது தொப்பென விழுந்தேன். கடந்த சில நாட்களாக இந்தக் கட்டிலில் தான் என் கனவுகள் தொடர்ந்தன. இன்று நந்தினி வந்துவிட்டாள். இன்றிரவு முதல் மீண்டும் அந்த குட்டி அறையில் தான் எனது கனவுலக சாம்ராஜியம் தொடர வேண்டுமென்பது விதி. பரவாயில்லை. இந்த வருடம் வரைதானே. இந்த வருடம் முடிந்ததும் மீண்டும் பழைய பாரி தாசன் பிரவேசிப்பான்.

கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். பிறகு குளித்து கிளம்பினேன். அப்போது நந்தினி மேல் அறைக்கு வந்தாள்.

"
எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு. நான் இங்க படுத்து தூங்கவா?" நான் தலையசைத்து வைத்தேன்.

"
உடம்புக்கு முடியலையா நந்தினி?".

"
எனக்கு எப்போதும் இப்படிதான். ரொம்ப தூரம் நடந்தாலே தலை வலி கொடுக்க ஆரம்பிச்சிடும். கொஞ்ச நேரம் தூங்கினா சரியாகிடும்" என்றாள்.
நான் ஏதும் பேசாமல் இருந்தேன். படுத்தவுடன் கண்களை மூடி அயர்ந்து போனாள்.

கட்டில் அருகே இருக்கும் சிறு விளக்கை போட்டேன். குளிரூட்டியின் அளவைக் குறைத்துவிட்டு போர்வையை அவள் மீது போர்த்திவிட்டேன். அறையின் விளக்கை அனைத்துவிட்டு கீழ் மாடிக்கு வந்த போது அம்மா தேநீரை சுவைத்தபடி இருந்தார்.

"
பாரி, நந்தினிக்கு உடம்பு சரி இல்லைப்பா". அவர் பேச்சை ஆமோதித்த விதமாய் தலையசைத்துவிட்டு நாட்காலியை இழுத்து போட்டு அமர்ந்தேன்.

"
முதல்ல அவ வாந்தி எடுத்தா", அம்மா என்னை பார்த்து சிரித்தபடி கூறினார்.

"
வாந்தியா... காய்ச்சலா இருக்குமோ...?"

"
உடம்பு சூடா இல்லை. ஒரு வேளை மாசமா இருக்கா போல...".

"
ஏம்மா நீங்க வேற... அவளுக்கு சின்ன வயசுல இருந்த மாதிரியே இன்னமும் ஒற்றைத் தலைவலி இருக்கு போல".

நந்தினிக்கு இளம் பிராயத்திலேயே இப்படி இருந்தது. கலைத்து போகுப்படியானால் அவளுக்கு தலைவலி ஏற்படும். பித்த வாந்தியும் எடுப்பாள். இதனாலேயெ அவளை வெளியே எங்கேனும் அழைத்துச் செல்ல வீட்டில் பயப்படுவார்கள். இன்னமும் அந்த பிரச்சனை அவளைவிட்டு நீங்கவில்லை என்றே அறிகிறேன்.

ஆனால் என் அம்மாவுக்குதான் என்னவெல்லாம் கனவுகள். அர்த்தமற்ற கனவுகள்.

"
டேய் பாரி அவளுக்கு நல்ல வேலையய பார்க்கனும்டா..".

"
என்ன வேலை? ஊர்ல நல்லா தானே வேலை பார்த்துகிட்டு இருந்தா? அந்த வேலைக்கு என்ன வந்துச்சு?".

"
அவ அந்த வேலைய விட்டுட்டா". அம்மா அப்படிச் சொன்னதும் நெற்றியைச் சுறுக்கினேன்.

அம்மா மேலும் தொடர்ந்தார். "என்னடா அப்படி பார்க்குற? அவ ஊர்ல வேலை செஞ்சிகிட்டு, நீ இங்க தனியா இருந்துகிட்டு நல்லாவா இருக்கு... உன் மாமா என்ன நினைப்பாரு... அதான் நந்தினிய வேலைய நிப்பாட்டி இங்கயே இருக்க சொல்லி அனுப்பிச்சிட்டாரு">

நான் என் பெரு மூச்சை அமைதியாக இறக்கி வைத்தேன்.

"
முதல்லயே அவகிட்ட கேட்டேன். ஏதாவ்து 'கிராணி' வேலை கிடைச்சா செய்யறதா சொல்றா... குழந்தை குட்டினு ஆன பிறகு வேணும்னா வேலைய விட்டுட்டு வீட்டோட இருக்கட்டும்".

அம்மாவின் பேச்சில் நிதர்சனம் இருந்தது. ஆனால் எனக்கு அது வேம்பாக கசத்தது.

"
உனக்கு தான் நிறைய பேர தெரியுமே... யார்கிட்டயாவது சொல்லி நல்ல வேலையா கிடைக்குமானு பாரு".

"
சரிமா நான் சொல்லி வைக்கிறேப்". நான் ஒப்புக்கு சொல்லி வைத்தேன். எனது பதில் அம்மாவுக்கு நிறைவை தந்திருக்கிறது என்பதை அவர் முகம் காட்டியது.

தேநீர் குடித்துவிட்டு சற்று நேரம் தொலைக்காட்சியைப் பார்த்தேன். மறுபடியும் மாடிக்குச் சென்று பார்த்த போது நந்தினி எழுந்துவிட்டிருப்பதைக் கண்டேன்.

"
இன்னும் தலைவலியா இருக்கா நந்தினி?" இல்லை என்பதாக தலையசைத்தாள்.

கட்டில் ஓரத்தில் பார்த்தேன். நந்தினியின் துணிப் பை இருந்தது. மதியம் நடந்த சம்பவத்துக்கு என் மனம் இட்டுச் சென்றது. அவளை அழைத்து வந்தவன் யார் என கேட்கலாமா என்று நினைத்தேன். அதைக் கேட்க உரிமை இல்லாதது போல் உணர்ந்தேன்.

"
நீங்க எங்க கிளம்புறிங்க". நான் பேச நினைத்துக் கொண்டிருக்கையில். நந்தினி என்னிடம் கேள்வியைக் கேட்டாள்.

"
கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்".

"
நானும் கூட வரவா? என்னையும் அழைச்சிகிட்டு போவிங்களா?" எனக் கனிவாக கேட்டாள்.

வீட்டில் இருப்பது அவளுக்கு இறுக்கமான சூழ்நிலையை உணர்த்துகிறது போலும். என்னுடன் வெளியே வர விரும்புகிறாள். அவளது கேள்வி எனக்கு நெருடலாக இருந்தது. என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. முக்கியமான விடயம் ஏதும் சொல்ல விரும்புகிறாளோ என்றும் உள்ளணர்வு சொல்லியது.

தொடரும்....

7 Comments:

Unknown said...

நந்தினிய வெளியே கூட்டிகிட்டுப் போய் நளினா கிட்ட பாரியை மாட்டி விடாதிர்கள்....அந்தோ பரிதாபம் அந்த பாரி....

Anonymous said...

என்ன விசயமா இருக்கும் ம்ம்ம்ம்?

வால்பையன் said...

உங்களுக்கு கல்யானம் ஆன விசயம் எங்களுக்கு தெரியாதை போலவே உங்கள் அலுவலகத்துக்கும் தெரியாதா?

:)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ உஷா

ஹா ஹா ஹா... அது சரி...


@ இனியவள் புனிதா

இருக்கும் இருக்கும்...

@ வால்பையன்

நல்லா கிளப்புறிங்களே...

A N A N T H E N said...

//" தண்ணி சாப்பிடலையாப்பா?"//
இது முரளி சொன்ன தண்ணி வகையில் சேராதுல்ல???

//" உடம்பு சூடா இல்லை. ஒரு வேளை மாசமா இருக்கா போல..."// சீரியல்,சினிமா பார்த்த தாக்கம்ன்னு நினைக்கன் அம்மாக்கு

G.VINOTHENE said...

hi..are you UUM ex-student?
any way..nice try..congrats!

VG said...

adadada.......... innum etanai naal kaatirukanum paariyin batilukagavum, nanthiniyin enna velipaatirkum. haizz......